day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ’அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி உள்ளதால் கட்சியின் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்வது குறித்தான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. தற்போது இந்த பொதுக்குழு கூட்டத்துக்கான கடிதங்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதனை தற்போது வெளியிடுவது குறித்து தலைமை கழகம் முடிவெடுக்கும்’. தொடர்ந்து, முரசொலி கருத்து குறித்து பதில் அளித்த அவர், ’சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது. தமிழகத்திற்கு தமிழக மக்களுக்கு பல்வேறு சமயங்கங்களில் துரோகம் இழைத்த கட்சி திமுக இது மக்களுக்கும் தெரியும்’ என தெரிவித்தார். ‘ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம். ஜெயலலிதா மறைவிற்கு பின் அவரின் செயல்பாடுகள் அப்படிதான் உள்ளது. அவர் கட்சியின் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா இல்லையா என்பது பொதுக்குழு கூட்டத்தில்தான் தெரியவரும்’ என கூறினார். ’ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்டாயப்படுத்தி அழைக்கவில்லை. அப்படி ஒரு நிலையிலும் நாங்கள் இல்லை. எங்களுடன் உள்ளவர்கள் உண்மையான தொண்டர்கள்’ எனவும் அவர் பேசினார்.
#pengalinkural #பெண்களின்குரல்

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!