சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி – ஒடிசா எப்சி அணிகள் மோதுகின்றன.
உள்ள சென்னையின் எப்சி 4 வெற்றி, 5 டிரா, 6 தோல்விகளுடன் 17 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் எஞ்சியுள்ள 5 ஆட்டங்களிலும் கணிசமான வெற்றிகளை பெற வேண்டும் என்ற நெருக்கடியில் சென்னையின் எப்சி அணி உள்ளது.
ஒடிசா அணியானது தொடர்ச்சியாக இரு தோல்விகளை சந்தித்த நிலையில் சென்னையின் எப்சி அணியை எதிர்கொள்கிறது. 7 வெற்றி, ஒரு டிரா, 7 தோல்விகளுடன் 22 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடம் வகிக்கிறது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி – ஒடிசா எப்சி அணிகள் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னையின் எப்சி 2 ஆட்டத்திலும், ஒடிசா எப்சி 2 ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடதக்கது.