day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ரூ.500 கோடி நஷ்ட ஈடு வழங்க அண்ணாமலைக்கு நோட்டீஸ் : தி.மு.க.

ரூ.500 கோடி நஷ்ட ஈடு வழங்க அண்ணாமலைக்கு நோட்டீஸ் : தி.மு.க.

சென்னை : தி.மு.க.வை சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அவர்களின் சொத்துபட்டியலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பதிலடி கொடுக்கும் விதமாக, ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் எம்.பி. அண்ணாமலைக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:- மு.க.ஸ்டாலினுக்கு அங்கீகாரம் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2021-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் மே மாதம் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், பொய்யான குற்றச்சாட்டு ‘தி.மு.க. பைல்ஸ்’ என்ற தலைப்பில் சுமார் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் நீங்கள் தி.மு.க. மீது பல தவறான, ஆதாரமற்ற, அவதூறான, கற்பனையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தீர்கள். தி.மு.க.வின் சில சொத்துகளின் மதிப்பை உயர்த்தி, தொடர்பில்லாத சொத்துகள் உள்ளிட்டவற்றின் மூலம் தி.மு.க.வுக்கு மொத்தம் ரூ.1,408.94 கோடி சொத்து இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.

வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய அதிகாரிகளிடம் தி.மு.க.வின் சொத்துகள் மற்றும் கடன்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. சொத்து விவரங்களை மறைத்திருந்தால் அத்துறை உரிய நடவடிக்கை எடுத்திருக்கும். தி.மு.க.வினருக்கு சொந்தமான பள்ளிகளின் மதிப்பு ரூ.3,474.18 கோடி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மதிப்பு ரூ.34,184.71 கோடி என்பது பொய்யானது. ஆடுகள், வாட்ச் சொத்தாக மாறுமா? உங்கள் ரபேல் கைக்கடிகாரம் பா.ஜ.க.வின் சொத்தாக மாறுமா?. உண்மைக்கு புறம்பானது 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022-ம் ஆண்டு வரை அரசியல் கட்சிகளுக்கு நிதியாக வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மொத்த மதிப்பு ரூ.9,208 கோடி என ஊடகங்கள் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதில் ரூ.5,270 கோடி பா.ஜ.க.வுக்கு மட்டுமே சென்றுள்ளது. இவையும் முறைகேடான வழியில் பெறப்பட்டவை என்று கூற முடியுமா?. தமிழ்நாடு முதல்-அமைச்சர் பணமோசடியில் ஈடுபடவே துபாய்க்கு சென்றார் எனவும் முற்றிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

நீங்கள் அதில் கூறியது போல நோபல் ஸ்டீல் நிறுவனத்தில் உதயநிதி ஸ்டாலின் எந்தப் பொறுப்பையும் எக்காலத்திலும் வகித்ததில்லை. உங்கள் காணொலியில் உதயநிதி ஸ்டாலின் ‘நோபல் புரோமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடேட்’ என்னும் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார் என கூறப்பட்டுள்ளது. அதில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டு, அதில் தனக்கிருந்த பங்குகளையும் 2010-ம் ஆண்டே அவர் விற்று விட்டார். துபாயில் ஒப்பந்தம் கையெழுத்தான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துக்கும் ‘நோபல் புரோமோட்டர்ஸ்’ நிறுவனத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நோபல் என்ற பொதுவான ஒரு பதத்தை மட்டும் வைத்துக்கொண்டு கற்பனையான, ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை எங்கள் கட்சித் தலைவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும்நோக்கோடு முன்வைத்துள்ளீர்கள்.

தி.மு.க.வின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது, தி.மு.க.வின் 2 கோடி உறுப்பினர்களில் ஒவ்வொருவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு சமம். எனவே, தி.மு.க. மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக நான் கூறிக்கொள்வது என்னவென்றால், உங்கள் பேச்சு, குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் வீடியோவை நீக்க வேண்டும். நஷ்டஈடாக ரூ.500 கோடி எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார். இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றை செய்ய தவறினால், உங்களுக்கு எதிராக பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார் என்று கூறப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!