சென்னை : சென்னை, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி இன்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையல் வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.