தமிழகத்தின் சென்னை, கேரளா உட்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம், மாநில-மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி, தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மாநில தலைமை அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.