day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் பிஎஃப்ஐ அலுவலகத்தில் என்ஐஏ சோதனை

நாடு முழுவதும் பிஎஃப்ஐ அலுவலகத்தில் என்ஐஏ சோதனை

தமிழகத்தின் சென்னை, கேரளா உட்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம், மாநில-மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி, தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மாநில தலைமை அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!