day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மின்சார உயிர் இழப்புகளை தடுக்க புதிய கருவி : தமிழ்நாடு மின்சார ஆணையம்

மின்சார உயிர் இழப்புகளை தடுக்க புதிய கருவி : தமிழ்நாடு மின்சார ஆணையம்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறுகையில் :மின் நுகர்வோர்கள் ஆர்சிடி கருவியை வீடு, கடை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் பொருத்த வேண்டும்.

மின்கசிவினால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை தடுக்க, ஆர்.சி.டி எனப்படும், ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் என்ற உயிர்காக்கும் சாதனத்தை மின் இணைப்பில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

மின்சார வாரியம்,ஆயிரங்கள் செலவில் ஆர்.சி.டியை நிறுவுவதன் மூலம் விலைமதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளது. வீடு, கடை, தொழில், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் அனைத்து வகையான மின் நுகர்வோர்களும் இதை பொருத்த வேண்டும் என்றும்,உயிர் பாதுகாப்பின் அடிப்படைத் தேவையான ஆர்.சி.டி (RCD) சாதனத்தை அவரவர் மின்னிணைப்பில் பொருத்தி விபத்தை தவிர்க்குமாறும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!