புதுடெல்லி : தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளும் ‘நீட்’ தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகள் பயிற்சி மையங்களில் சேர்ந்து ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி பெற்று வருகின்றனர். மருத்துவ படிப்பிற்கான ‘நீட்’ தேர்வு வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், நாடு முழுவதும் 499 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் NTA NEET அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.neet.nta.nic.in அல்லது www.nta.ac.in இல் தங்கள் தேர்வு மைய நகர தகவலை தெரிந்துகொள்ளலாம். நாடு முழுவதும் நீட் தேர்வு மே 7 ஆம் தேதி மதியம் 2:00 முதல் 5:20 மணி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.