புதுடெல்லி : டெல்லியில் உள்ள கங்கா ராம் நினைவு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசியதாவது:- நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. வழக்குகளின் எண்ணிக்கையை பார்க்கும்போதே மருத்துவக் கல்வி முறையில் மாற்றம் தேவை என்பது தெரிகிறது.
மத்திய அரசின் கொள்கை சார்ந்த விவகாரங்களில் நீதிமன்றங்கள் அடிக்கடி தலையிட முடியாது. நீதிமன்றங்கள் தலையிடாது என்றாலும் மாணவர்கள் கோரிக்கை ஏற்று மாற்றம் செய்ய வேண்டியது அரசின் கடமை. மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதில் தலையிட வேண்டியது கட்டாயம் நீதிமன்றத்தின் கடமை என்று கூறியுள்ளார்.