சென்னை : நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு மருத்துவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையை தொடங்கிவைத்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது:- நாளை முதல் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தி வருகின்றது, எனவே பொதுமக்கள அனைவரும உரிய வழிமுறைகளை காத்துக்கொள்ள கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.