ஜெய்ப்பூர்: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் இணை வழக்கத்துக்கு மாறாக நிதானமாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கே.எல்.ராகுல் 39 ரன்களில் அவுட்டானார். இறுதியில் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.
155 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு பட்லர் – ஜெய்ஸ்வால் இணை நல்ல துவக்கம் தந்தது. இருவரும் ஸ்லோ இன்னிங்ஸ் ஆடினாலும், இருவருமே 40 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றிகண்டது. இந்த தொடரில் லக்னோ பெறும் 4வது வெற்றி இதுவாகும்.