மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி 5-வது நாளாக நாடளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை அலுவல்படி கேள்வி நேரம் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடக்கும். பிரதமர் மோடி மீது நாட்டு மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மழைக்காலக் கூட்டத்தொடரில் வழக்கம்போல் 11 முதல் 12 மணி வரை கேள்வி நேரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மணிப்பூர் விவகாரம் பேசப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.