சியோல் : சீனாவில் கடந்த 2019இல் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை சீர்குழைத்துவிட்டது. இதன் பாதிப்பு ஒருபுறம் உயிரிழப்புகள், மறுபுறம் பொருளாதார பாதிப்பு என மீளமுடியா துயரத்தில் ஆழ்த்தியது. கடந்த சில மாதங்களாக உலகெங்கும் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, இப்போது மெல்ல மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில், வடகொரியா நாட்டில் கொரோனா வைரஸ் இப்போது உச்சத்தை எட்டியுள்ளது. வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.