day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் : முதல்வர் ஸ்டாலின்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் : முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 21.02.2023 அன்று தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதாகவும், பாரம்பரிய கடற்பகுதியில் இன்று (23.02.2023) மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அதிகாலை 4.30 மணியளவில் இலங்கைக் கடற்படையினர் அவர்களை இரும்பு கயிறுகளைக் கொண்டு தாக்கியதாகவும் அவர்களின் மீன்பிடி உபகரணங்கள், இரண்டு பேட்டரிகள் என்ஜின் மற்றும் ஜி.பி.எஸ் கருவிகளை எடுத்துச் சென்றுவிட்டனர் என்றும் இத்தாக்குதலில் காயமடைந்த ஐந்து மீனவர்கள் தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

மேலும், இந்தத் தாக்குதல், அனைத்து சர்வதேச விதிமுறைகள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக மீறுவதாகவும், பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை இலங்கைக் கடற்படை தொடர்ந்து மீறி வருவதுடன், நமது மீனவர்களுக்கு கடுமையான காயங்களையும், பொருளாதார இழப்புகளையும் அடிக்கடி ஏற்படுத்துவதையும் , இலங்கை கடற்படையினரின் இத்தகைய வன்முறைச் செயல்கள் அதிர்ச்சியளிப்பதுடன் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்று, நமது இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!