புதுடெல்லி: பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சிறப்பாக வரவேற்றார். இந்நிலையில், பூடான் மன்னர் வாங்சுக் இன்று டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பூடான் மன்னரின் இந்திய பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான மற்றும் தனித்துவமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.