கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. இந்த திரைப்படம், கன்னட திரையுலகில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரூ.17 கோடி மதிப்பீட்டில் உருவான காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலைப் பெற்றுள்ளதாகவும் மேலும், மொத்தமாக ரூ.200 கோடிவரை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், காந்தாரா திரைப்படம் வரும் 4ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.