பி.இ./பி.டெக் படிப்புகளில் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை ஜே.இ.இ. முதன்மை தேர்வு அடிப்படையில் நடக்கிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ. நுழைவு தேர்வுகள் இரண்டு அமர்வுகளாக நடத்தி முடிக்கப்பட்டு அதன் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதிய நிலையில், 24 பேர் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த தேர்வில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட காரணத்திற்காக 5 தேர்வர்களின் முடிவுகளை தேசிய தேர்வு முகமை நிறுத்தி வைத்துள்ளது..