குடியரசு துணைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், அவர் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், நாட்டின் 14ஆவது குடியரசுத் துணைத் தலைவராக முன்னாள் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்கவுள்ளார். அவருக்கு வயது 71. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடந்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் 528 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து பேட்டியிட்ட எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை, தோற்கடித்தார். இதையடுத்து இன்று காலை 11.45 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஜெகதீப் தன்கருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.