இந்தியாவின் மிகப்பெரிய தோல் பொருட்கள் தயாரிப்பு மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனமான கே.எச். குரூப் தலைமை அலுவலகம் மற்றும் அதன் தொடர்புடைய சென்னை, வேலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட 60 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், ஃபரிதா தோல்பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.