பி.எஸ்.எல்.வி. – சி 53 ராக்கெட் மூன்று செயற்கைக் கோள்களுடன் இன்று மாலை 6.02 மணிக்கு விண்ணில் பாயத் தயாராக உள்ளது. மூன்று செயற்கைக் கோள்களில் முதன்மையானதான சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 365 கிலோ எடை கொண்ட டி.எஸ். – இ.ஓ. செயற்கைக் கோள் தெளிவாக வண்ண புகைப்படங்களை எடுக்கும் திறன் உடையது. அடுத்து 155 கிலோ எடை உடைய ‘நியூசர்’ செயற்கைக்கோள் இரவு பகல் என அனைத்து வானிலை சூழலிலும் புவியை துல்லியமாக படம் எடுக்கும் வல்லமைக்கொண்டது. இறுதியாக, சிங்கப்பூரை சேர்ந்த நன்யாங் தொழில்நுட்ப பல்கலை மாணவர்கள் வடிவமைத்த 2.8 கிலோ எடை உடைய ‘ஸ்கூப் – 1’ செயற்கைக்கோள் கல்வி பணிகளுக்காக அனுப்பப்பட உள்ளது.