day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

40 கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு: இன்று ஜி-20 மாநாடு ஆலோசனை

40 கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு: இன்று ஜி-20 மாநாடு ஆலோசனை

ஜி-20 மாநாடு குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு, பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார். மத்திய வெளியுறவு அமைச்சர்ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத்ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்குமாறு 40 கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ள.

தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உட்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். 1999-ல் தொடங்கப்பட்ட ஜி-20 அமைப்பின் தலைமைப்பொறுப்பு ஒவ்வோர் ஆண்டும் மாறுகிறது. கடந்த ஆண்டு இந்தோனேசியா தலைமை வகித்த நிலையில், கடந்த 1-ம் தேதி ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது.

இந்தியா சார்பில் ஜி-20 அமைப்பின் முதல் ஆலோசனைக் கூட்டம் ராஜஸ்தானின் உதய்பூரில் நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஜி-20 உறுப்பு நாடுகள் மற்றும் வங்கதேசம், எகிப்து, நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம், மொரீசியஸ் ஆகிய விருந்தினர் நாடுகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவில் ஜி-20 மாநாடுகள் நடைபெறும் இடங்கள், அவற்றில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்நிலையில், ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கும் ஓராண்டு காலத்தில், தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் 56 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட மாநாடுகள், கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. ஜி-20 மாநாடு நடைபெறும் நகரங்களைப் புதுப்பொலிவுடன் மாற்றுவது, வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்று உபசரிப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!