இலங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில், கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக இந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், 378 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் 7 விக்கெட்களை கைவசம் வைத்துள்ள இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேகரித்து வருகிறது. தங்களின் அபார பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்தி இங்கிலாந்தை வீழ்த்தும் முனைப்பில் இந்திய அணி போராடிவருகிறது.