இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஐந்து டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. இதில், முதலில் களத்தில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.1 ஓவரில் 212 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் வெற்றியை தென்னாப்பிரிக்கா அணி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி, ஒரிசா மாநிலத்தில் உள்ள பாராபதி மைதானத்தில் நேற்று முன்தினம் (12ஆம் தேதி) நடைபெற்றது. முதலில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் களத்தில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. இதன் தொடர்ச்சியாக 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட்டை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.2 ஓவரில் 149 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இரண்டாவது வெற்றியை தென்னாப்பிரிக்கா அணி பெற்றுள்ளது. இந்த நிலையில், மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ஆர். சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற இருக்கிறது. இதுவரை 2-0 என்ற கணக்கில் பின்தங்கி உள்ள இந்திய அணி இந்த போட்டியில் வெற்றிப்பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்பதால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என இந்திய ரசிகர்கள் இந்த போட்டியைக்காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.