இந்தியா தொழில் முனைவோர் துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்ததற்காக அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் பாராட்டு தெரிவித்தார்.டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் கூறியதாவது:- இந்தியா தற்போது தொழில் முனைவோர் துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும், 77,000 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களுடன் உலகளவில் ஸ்டார்ட்அப்களுக்கான மூன்றாவது பெரிய சுற்றுச்சூழல் அமைப்பாக இந்தியா உருவெடுத்துள்ளது.இந்திய ஸ்டார்ட்அப்கள் உலக அளவில் பெரும் மதிப்பைப் பெற்றுள்ளன என்று தெருவித்தார்.