சென்னையில் இன்று நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில் : மாற்றுத்திறனாளிகளை அனைவரும் மதிக்க நாம் வேண்டும். அவர்களுக்கு எப்பொழுதும் தனி கவனம் செலுத்த வேண்டும். மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக உருவாக்கிய அந்த பாதை அன்பு பாதை என்றும் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியால் நானும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.1500ஆக உயர்த்தப்படுகிறது. இத்தொகை ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். மேலும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே பணிபுரிய ஏதுவாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.