day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஓரினச்சேர்க்கையாளர் விவகாரம் : தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கருத்து

ஓரினச்சேர்க்கையாளர் விவகாரம் : தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கருத்து

புதுடெல்லி : ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கக் கோரி நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதன்படி அரசியல் சாசன அமர்வில் கடந்த 18ம் தேதி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இ

ந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கலாமா? என்பது தொடர்பாக தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறியதாவது:- ஒரே பாலின உறவுகளை வெறும் உடல் உறவுகளாக மட்டும் பார்க்காமல், நிலையான உணர்ச்சிபூர்வமான உறவாக பார்க்கிறோம். ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க, திருமணம் குறித்த கருத்தை மறுவரையறை செய்ய வேண்டும். திருமணத்திற்கு இரு வேறு பாலினத்தைச் சேர்ந்த துணைவர்கள் அவசியமா? 1954 ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து, கடந்த 69 ஆண்டுகளில் இந்தச் சட்டம் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் அடைந்துள்ளது. ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்கும்போது, ஒரே பாலினத்தைச் சேர்ந்த வயது வந்தவர்கள் சம்மதத்துடன் கூடிய உறவை அங்கீகரித்தது மட்டுமல்லாமல், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் நிலையான உறவில் கூட இருப்பார்கள் என்பதையும் அங்கீரித்துள்ளோம். ஒரே பாலின ஜோடியின் குழந்தை சாதாரண சூழ்நிலையில் வளருமா? இவ்வாறு தலைமை நீதிபதி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!