சென்னையின் புறநகர் பகுதியான திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் கூட்ட நெரிசல் காரணமாக ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி அதிகப்படியான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.ரயில்கள் குறைவாகவும் 10 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படுவதால் அதிகப்படியான பயணிகள் கிடைத்த ரயிலில் பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக வேலைக்கு செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.