day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

சென்னையில் நேற்று இரவு விடிய விடிய கனமழை இன்னும் அடுத்த 3 மணி நேரத்திற்க்கு மழை எச்சரிக்கை : வானிலை ஆய்வு மையம்

சென்னையில் நேற்று இரவு விடிய விடிய கனமழை இன்னும் அடுத்த 3 மணி நேரத்திற்க்கு மழை எச்சரிக்கை : வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக் கடலில் நிலவிவரும் ‘மாண்டஸ்’ புயல் புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகில் இன்று நள்ளிரவு கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதால் , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.இதனால் நேற்று விடிய விடிய சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.இன்னும் அடுத்த 3மணி நேரத்திற்க்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் கரூர் மாவட்டத்திலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சிறுமலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!