குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி,) வெளியிட்டது. இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில், முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வு கடந்த மாதம் (அக்டோபர்) 30-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், சில காரணங்களுக்காக அது தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட முதல்நிலைத் தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடக்கும். தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.