தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் உயிரியல் பூங்கா அருகே உள்ள வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் மகிழம் மரக்கன்றை நட்டு ‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர், பாரம்பரிய விதைகள், காடுகள், மரங்கள் குறித்த குறிப்புகள் அடங்கிய கண்காட்சியினை பார்வையிட்ட முதலமைச்சர் பின்னர் உரையாற்றினார். இந்த விழாவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் வனப்பரப்பை 28.3 சதவிகிதத்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.