செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- செங்கல்பட்டு மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமானவரித்துறை ஆய்வாளர், உதவியாளர் போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு கல்வித்தகுதி பட்டதாரி ஆகும். வயதுவரம்பு 01.08.2023 தேதியில் 18 முதல் 27 ஆகும். இந்த பணியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 03-05-2023 ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.