day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மாற்றுததிறனாளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் – அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மாற்றுததிறனாளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் – அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு பள்ளி மாணவ – மாணவியருக்கு இலவச லேப் டாப்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2020 – 2021ஆம் கல்வியாண்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாற்றுத் திறனாளி மாணவ – மாணவியருக்கு லேப்டாப்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். அதனால், மாற்று திறனாளி மாணவ – மாணவியருக்கு இலவச லேப்டாப்கள் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இது தொடர்பாக கடந்த செப்டம்பரில் அரசுக்கு அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, திட்டம் அமலில் இருந்தால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கலாமே என அரசுக்கு அறிவுறுத்தி மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!