அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி பாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக 315 சதவிகிதம் சொத்துக்களை குவித்ததாக பாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீது நான்கு பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, அவருக்கு சொந்தமான, மதுரையில் 24 இடங்களிலும், திருப்பூர் மற்றும் நாமக்கலில் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.