day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஜி-20 மாநாடில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு குழுவுக்கு பாரம்பரிய நடனங்களுடன் வரவேற்பு : கொல்கத்தா

ஜி-20 மாநாடில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு குழுவுக்கு பாரம்பரிய நடனங்களுடன் வரவேற்பு : கொல்கத்தா

கொல்கத்தா, ‘ஜி-20’ என்னும் அமைப்பில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்தது. இதன்பின்பு, ஜி-20 மாநாட்டை தலைமையேற்று நடத்தும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுபற்றி பிரதமர் மோடி கூறும்போது, நமது நாடு சுதந்திரத்தின் 75-வது ஆண்டை கொண்டாடியுள்ள தருணத்தில் ‘ஜி-20’ அமைப்புக்கு தலைமை ஏற்பது பெருமைக்குரியது. இது நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஆகும் என குறிப்பிட்டார்.

இதனையொட்டி, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஜி-20 மாநாடு முதன்முறையாக நடைபெற உள்ளது. இந்த மாநாடு இன்று தொடங்கி வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக வெளிநாட்டு குழுவினர் இன்று அந்நகருக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு, மேளதாளங்கள் மற்றும் பாரம்பரிய நடனங்களுடன் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!