புதுடெல்லி: இயற்கைப் பேரிடரைப் போன்று சுகாதார பேரிடர் நேரிடுமானால் அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான பயிற்சிகளை வழங்கும் நோக்கில் நாட்டின் முதல் பயிற்சிப் பட்டறை டெல்லியில் இன்று தொடங்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிப் பட்டறையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா தொடங்கிவைத்தார்.
மண்சுக் மாண்டவியா பேசியதாவது :- நாட்டில் சுகாதார அவசர நிலை ஏற்பட்டால் அதை எவ்வாறு ஒருங்கிணைந்து எதிர்கொள்வது என்பது குறித்து விவரித்தார். நாட்டின் பல்வேறு துறைகளும் ஒருங்கிணைவதில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும், திட்டங்களை செயல்படுத்துவதில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் அவர் விளக்கினார்.