FIFA2022 தோகா, 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நள்ளிரவு 12.30 மணிக்கு தோகாவில் உள்ள ராஸ் அபு அபவுத் ஸ்டேடியத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் பிரேசில், தென் கொரியா அணிகள் மோதின.
இதில், சுற்றின் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தோடு களமிரங்கிய பிரேசில் வீரர்கள் முதல் பாதியில் கோல் மழை பொழிந்தனர். வினி ஜூனியர் 7-வது நிமிடத்திலும், நெய்மர் 13-வது நிமிடத்திலும், ரிச்சர்லிசன் 29-வது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் பிரேசில் அணி 4-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 76-வது நிமிடத்தில் தென் கொரியாவின் பெய்க் சியூங் ஒரு கோல் அடித்தார். இறுதியில், தென்கொரியாவை வீழ்த்தி பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் காலிறுதிக்கு முன்னேறியது.