day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ்

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி நடந்த விரும்பத்தகாத சம்பவம் குறித்து 400 பேர் மீது ராயப்பேட்டை காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் 30க்கும் மேற்பட்டோருக்கு ராயப்பேட்டை காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அதனடிப்படையில் நாளை காலை 11 மணிக்கு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் 15-க்கும் மேற்பட்டோருக்கும், நாளை மறுநாள் காலை 11 மணிக்கு ஈ.பி.எஸ். ஆதரவாளர்களும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!