மணிலா: அமெரிக்க புவியியல் மையம் தரப்பில் கூறியதாவது:- “பிலிப்பைன்ஸில் மாஸ்பேட் தீவில் உள்ள மியாகா பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 11 கி.மீட்டர். நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அச்சமடைந்து வீதிக்கு வந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.
முன்னதாக, பிலிப்பைன்ஸில் கடந்த 2019 அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 7 பேர் பலியாகினர். 215 பேர் காயமடைந்தனர். ரிங் ஆஃப் ஃபயர்: ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு’ என அழைக்கப்படும் பசிபிக் ‘ரிங் ஆஃப் ஃபயர்’-ன் ஒரு பகுதி பிலிப்பைன்ஸின் சிறுபகுதியையும் உள்ளடக்கிவுள்ளது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் அவ்வப்போது சுனாமி பாதிப்புகளும் ஏற்படுகின்றன.