நாகப்பட்டிணம் : தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். மேலும், திருவாரூர் மாவட்டத்தில் மழைகாரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்துள்ளார் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் . இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.