மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், நாடு முன்னேறுகிறது என மோடி பேசும் பொய்யை விட திமுகவினர் பேசும் சமூகநீதி என்பது பெரிய பொய். ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை எனக் கூறும் அண்ணாமலை, மோடி 8 ஆண்டாக எதுவும் செய்யவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும், அவசரப்பட்டு ஐபிஎஸ் வேலையை அண்ணாமலை விட்டுட்டு வந்துவிட்டதாகவும், இரண்டு வருடத்தில் அண்ணாமலையை பாஜகவினர் விரட்டிவிடுவார்கள் என்றும் பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஹெச்.ராஜாவிற்கு ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி வாங்கிக் கொடுத்துவிடுங்கள். காரைக்குடியில் ஒரு ஆளுநர் என இட ஒதுக்கீடு வழங்கி ஹெச்.ராஜாவிற்கு நான் சிபாரிசு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.