day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை

திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 13-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தி.மு.க. கவுன்சிலர் தேவிபிரியா, கணவர் அருண்லால், மகள் என 3 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தாய் தேவிபிரியா, தந்தை அருண்லால் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் 18 வயது மகள் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் பிரச்னையால் மகள் கணவருடன் பெண் கவுன்சிலர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தி.மு.க. பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!