day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

டெல்லி-மும்பை விரைவு சாலை தயார் : விரைவில் பிரதமர் மோடி திறப்பு

டெல்லி-மும்பை விரைவு சாலை தயார் : விரைவில் பிரதமர் மோடி திறப்பு

புதுடெல்லி: அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் 2-வது மிகப்பெரிய சாலை போக்குவரத்தை கொண்ட இந்தியாவில் சாலை உட்கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நாள்தோறும் 37 கி.மீ. தொலைவுக்கு புதியசாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை 60 கி.மீ. ஆக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

இப்போது 8 வழிச் சாலையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த விரைவுச் சாலையை 12 வழிசாலையாக விரிவுபடுத்த போதுமான இடவசதி உள்ளது. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் சாலை போடப்பட்டிருப்பதால் அடுத்த 50 ஆண்டுகள் வரை சாலையில் எவ்வித சேதமும் ஏற்படாது என்று கட்டுமான நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. சாலையின் 500 மீட்டர் தொலைவு இடைவெளியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல எந்த பகுதியிலும் வேகத் தடைகள் அமைக்கப்படவில்லை. மனிதர்கள், விலங்குகள் சாலையின் குறுக்கே செல்லாத வகையில் விரைவு சாலை முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சாலையில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யலாம். வேக கட்டுப்பாட்டை தாண்டினால் அபராதம் விதிக்கப்படும். எதிர்பாராதவிதமாக வாகனத்தில் பழுது ஏற்பட்டால் மட்டுமே சாலையோரம் நிறுத்தலாம். தேவையின்றி வாகனத்தை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும். சாலையின் 50 கி.மீ. தொலைவு இடைவெளியில் ஓய்வெடுப்பதற்காக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மட்டுமே வாகனத்தை நிறுத்த வேண்டும். அங்கு தங்கும் விடுதி, ஓட்டல், ஏடிஎம், மளிகை கடை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும். சாலையோரம் 93 இடங்களில் சிறாருக்கான பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு 100 கி.மீ. தொலைவு இடைவெளியில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் குறிப்பிட்ட இடங்களில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதற்கான ஹெலிபேட் அமைக்கப்பட்டிருக்கிறது. எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் அல்லது ஹெலிகாப்டர் மூலம் பயணிகள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவர். விரைவு சாலையின் ஒரு வழித்தடம் முழுமையாக மின்சார வாகனங்களுக்காக ஒதுக்கப்பட உள்ளது. இதுவே நாட்டின் முதல் இ-சாலை ஆகும். விரைவு சாலை முழுவதும் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இப்போது டெல்லியில் இருந்து மும்பைக்கு சாலை மார்க்கமாக செல்ல 24 மணி நேரமாகிறது. விரைவு சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு 12 மணி நேரத்தில் டெல்லியில் இருந்து மும்பை சென்றடையலாம்.

தமிழக தலைநகர் சென்னை, குஜராத்தின் வர்த்தக தலைநகரான சூரத்தை இணைக்கும் வகையில் 1,450 கி.மீ. தொலைவுக்கு 6 வழி விரைவுச் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த விரைவு சாலையின் கர்நாடக திட்டப் பணியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் விரைவு சாலை பணிகள் தற்போது வேகம் பெற்று வருகிறது. இந்த சூழலில் குஜராத்தின் சூரத் நகரில் அமைக்கப்பட்டிருக்கும் டெல்லி-மும்பை விரைவு சாலையுடன் சென்னை-சூரத் விரைவு சாலை இணைக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!