சைபராபாத்: இந்தியாவின் 24 மாநிலங்கள் மற்றும் 8 பெருநகரங்களைச் சேர்ந்த சுமார் 66.9 கோடி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பயனர் தரவுகளை தட்டி தூக்கிய வினய் பரத்வாஜ் எனும் நபர், அதை திருடி, தகவல்களை விற்பனை செய்துள்ளார். அவர் ஜிஎஸ்டி உள்ளிட்ட விவரங்களையும் திருடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எப்படி இவ்வளவு தரவுகள் கசிந்தது என்ற விசாரணையை சைபராபாத் போலீஸார் துவங்கியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மூன்று வங்கிகள், சமூக வலைதள நிறுவனம், பலசரக்கு விற்பனை செய்யும் நிறுவனம், ஐடி சேவை வழங்கும் நிறுவனம், டிஜிட்டல் பேமெண்ட் செயலி மற்றும் ஆன்லைன் இன்சூரன்ஸ் தளம் என மொத்தம் 11 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது காவல் துறை. ‘InspireWebz’ எனும் தளம் மூலம் கிளையண்ட்களுக்கு தரவுகளை கைதான வினய், விற்பனை செய்துள்ளார். வினய், தெலங்கானாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.