புதுடெல்லி : நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது. இது 7 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக அதிகபட்ச பாதிப்பு ஆகும். இந்த நிலையில், இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிப்பின் படி ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 10,158- ஆக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.