புதிய கல்விகொள்கையின் படி, மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடப்பு கல்வியாண்டு முதல் CUET பொது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறுகிறது. அதன்படி, கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 6 கட்டங்களாக நடந்த கியூட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை https://cuet.samarth.ac.in என்ற தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. மேலும், தேர்வு எழுதியவர்களின் விவரங்கள், தொடர்புடைய பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், தேர்வர்கள் தாங்கள் சேர விரும்பிய பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு சேர்க்கை பெறலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.