மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் பேரில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 093 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,84,729 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், ஒரே நாளில் தொற்று பாதிப்புக்கு 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,121 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,39,06,972 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் தொற்று பாதிப்புக்கு 49,636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.