இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று 4 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை இன்று 5 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,345 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும், 28 ஆயிரத்து 857 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.