day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – அச்சத்தில் மக்கள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – அச்சத்தில் மக்கள்

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், இன்று (ஜூலை மாதம் 28ஆம் தேதி) நாடு முழுவதும் புதிதாக மேலும் 20 ஆயிரத்து 577 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் புதிதாக 14 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், நேற்று மேலும் புதிதாக 18 ஆயிரத்து 313 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் புதிதாக அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்படுவதால் நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். இத்துடன் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 59 ஆயிரத்து 341ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 323ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதித்தவர்களில் புதிதாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 211ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து நேற்று 19 ஆயிரத்து 216 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 86 ஆயிரத்து 787-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,03,21,82,347 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமையான நேற்று மட்டும் 40,96,241 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!