இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,272 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 83 ஆயிரத்து 360 ஆனது. மேலும், 4,474 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 4 கோடியே 40 லட்சத்து13 ஆயிரத்து 999 பேர் குணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேர் உயிரிழந்தனர். இதனால், கோவிட் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 611 ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 21 கோடி 81 லட்சம் ஆகும் நேற்று ஒரே நாளில் மட்டும் 21,63,248 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.