day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஒரேநாளில் 18,819 பேருக்கு கொரோனா – ஒரு லட்சத்துக்கும் மேலானோருக்கு சிகிச்சை

ஒரேநாளில் 18,819 பேருக்கு கொரோனா – ஒரு லட்சத்துக்கும் மேலானோருக்கு சிகிச்சை

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18 ஆயிரத்து 819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 4 ஆயிரத்து 313 அதிகமாகும். நேற்று 14 ஆயிரத்து 506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. கொரோனாவால் பாதித்து சிகிச்சைப் பெற்று வருபவர்களின் என்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 555 பேராக உள்ளது. 13 ஆயிரத்து 827 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 116ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 197.61 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14 லட்சத்து 17 ஆயிரத்து 217 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!