day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தொடர்ச்சியாக உயர்ந்த கொரோனா – இன்று சற்று குறைவு

தொடர்ச்சியாக உயர்ந்த கொரோனா – இன்று சற்று குறைவு

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், இன்று (ஜூலை மாதம் 29ஆம் தேதி) நாடு முழுவதும் புதிதாக மேலும் 20 ஆயிரத்து 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று 20 ஆயிரத்து 577 பேருக்கும் நேற்று 18 ஆயிரத்து 313 பேருக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை 14 ஆயிரத்து 830 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் புதிதாக அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இத்துடன் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 79 ஆயிரத்து 730ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 43 ஆயிரத்து 988ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதித்தவர்களில் புதிதாக 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 258ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து நேற்று 19 ஆயிரத்து 216 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 09 ஆயிரத்து 484-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,03,60,46,307 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமையான நேற்று மட்டும் 38,63,960 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!